“நீ ஆபத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறாய் எனில், அதை ஆபத்து என்று உணராத வரை உனக்கு ஆபத்து இல்லை. தைரியத்துடன் போராடு!”துணிச்சல் போராட்டம்
“உனக்கான ஒன்றை ஒருவன் தட்டிப் பறிப்பதால் அவன் உயரப் போவதுமில்லை; உனக்கான ஒன்றை நீ விட்டுக்கொடுப்பதால் நீ வீழப் போவதுமில்லை.”உரிமை நம்பிக்கை
“தோல்வி என்பது இருள் வெற்றி என்பது வெளிச்சம் தோல்வியின் இருளிலிருந்து வெற்றி எனும் வெளிச்சத்திற்கு நீ வரும்வரை போராடு.”தோல்வி வெற்றி
“தோல்வியை நினைத்து எனக்கு கவலை இல்லை; வெற்றி தராத ஒன்றை தோல்வி எனக்குத் தந்துள்ளது. அதுவே அனுபவம்.”அனுபவம் தோல்வி
“ஒருமுறை வெற்றி பெற்றவர்களைவிட, ஆயிரம் முறை தோல்வியைச் சந்தித்தவர்களே இறுதியில் சாதனையாளர்களாக உருவாகின்றனர்”சாதனை தோல்வி
“இவ்வுலகத்தை மாற்ற வேண்டும் என்று நீ விரும்பினால், அந்த மாற்றத்தை உன்னிடமிருந்தே தொடங்கு.”மாற்றம் முன்னேற்றம்
“மண்ணில் உன்னைத் தூக்கி எறிவது புதைப்பதற்காக அல்ல; விதைப்பதற்காக. நீ முளைத்தால் மரம், புதைந்தால் உரம்.”வளர்ச்சி விதை
“உன்னைத் தனித்து விடுவது, நீ சிறகை விரிப்பதற்காகத்தானே தவிர, உன் சிறகை உடைப்பதற்காக அல்ல.”சிறகு தனிமை
“உன்னை அவமானப்படுத்தியவர்களை அவமானப்படுத்துவது பதிலடி அல்ல; அவர்கள் முன்னே வாழ்ந்து காட்டுவதே உண்மையான பதிலடி.”அவமானம் வெற்றி
“‘பறக்க ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்துவிடாதே’ என்பார்கள்; ஆனால் பறக்க ஆசைப்படு… அப்போதுதான் குறைந்தபட்சம் நடக்கவாவது தொடங்குவாய்.”ஆசை முன்னேற்றம்
“உன்னைத் தாழ்த்தினால் வளைந்து உடைவதற்கு நீ கிளை அல்ல; ஆணிவேர் என்பதை நிரூபித்துக் காட்டு.”ஆணிவேர் வலிமை
“நீ விழுந்தால், ‘இந்த உலகம் எனக்கானது அல்ல’ என்று நினைக்காதே; நீ எழுந்து நின்றால், இவ்வுலகமே உனக்கானதுதான்.”உலகம் எழுச்சி
“இவ்வுலகில் யாவரையும் சாதாரணமாக எண்ணாதே; தெருவில் இருக்கும் காகிதமும் ஒருநாள் பட்டமாக உயரத்தில் பறந்தால்தான் அதன் உயரம் தெரியும்.”உயர்வு வாழ்க்கை