“நீ ஆபத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறாய் எனில், அதை ஆபத்து என்று உணராத வரை உனக்கு ஆபத்து இல்லை. தைரியத்துடன் போராடு!”துணிச்சல் போராட்டம்
“உன் முயற்சிகள் அனைத்தும் பயனற்றவை என்று நினைக்காதே; அதில் நீ பெற்ற அனுபவங்களே உனக்கு பயனளிக்கும்.”அனுபவம் முயற்சி
“கையை ஊன்றி நீ எழும்போது, விழுந்துவிடுவோமோ என்று நினைத்திருந்தால், இன்றும் நீ குழந்தையாகவே இருந்திருப்பாய்”துணிச்சல் வளர்ச்சி
“இவ்வுலகில் உள்ள சாதனையாளர்கள் அனைவரும் ஒரே முறை வெற்றி பெற்றவர்கள் அல்ல; பல முறை தோல்வியைச் சந்தித்தவர்களே.”சாதனை தோல்வி
“உன்னை எதிர்ப்பவன் பலம் பொருந்தியவனாக இருந்தால், நீ எதிர்த்து நில். நீ எதிர்த்து நின்றாலே, அவனின் தன்னம்பிக்கையும் சிறிது குறையும்.”தன்னம்பிக்கை துணிச்சல்
“உன்னை எதிர்த்து நிற்பவரைப் பார்த்து பயப்படாதே; உன்னை வெல்ல உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கு.”தன்னம்பிக்கை துணிச்சல்
“‘இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற துணிச்சல் உன்னிடம் இருந்தால், இனி எதையும் இழக்க மாட்டாய்.”துணிச்சல் வெற்றி
“தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்து, தடைகள் என்னும் பாறையை உடைத்துச் செல்பவனுக்கே வெற்றி நிச்சயம்.”தன்னம்பிக்கை வெற்றி
“உன் விடாமுயற்சியால் தோல்வியே உன்னிடம் தோற்றுப்போகும் வரை, முயற்சி செய்து கொண்டே இரு.”தோல்வி விடாமுயற்சி
“உன்னை எதிர்ப்பவன் பலம் பொருந்தியவனாக இருந்தால், அவனை உன் பலத்தால் அல்ல; அவன் பலவீனத்தால் வீழ்த்து.”பலம் பலவீனம்
“தன் கையை மட்டும் நம்பி தோற்றவர்கள் இவ்வுலகில் உண்டு; தன்னம்பிக்கையை நம்பி தோற்றவர்கள் இவ்வுலகில் எவருமில்லை.”தன்னம்பிக்கை வெற்றி
“என் முன்னே எவ்வளவு பெரிய தடை இருந்தாலும் எனக்கென்ன? அதைத் தாண்டிச் செல்ல எனக்குத் தேவையானது ஒரு சிறு வழி மட்டுமே.”தடை வாய்ப்பு
“உன் திறமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்; அது நீயாக மட்டும் இருந்துவிடாதே.”தன்னம்பிக்கை திறமை
“இவ்வுலகில் சாதித்தவர்கள் அனைவரும் விடாமுயற்சியால் உயர்ந்தவர்களே; அதிர்ஷ்டத்தால் அல்ல.”விடாமுயற்சி வெற்றி
“விருப்பம் இல்லாமல் செய்தால் சிறு கல்லைக்கூட நகர்த்த முடியாது; விருப்பத்தோடு செய்தால் பெரிய மலையைக்கூட தகர்த்தெறிய முடியும்.”விடாமுயற்சி விருப்பம்
“நீ நீயாக இருக்கும் வரை உன்னை வெல்ல யாராலும் முடியாது; மற்றவர்களைப் போல மாற நினைத்தாலே, முதல் தோல்வி உனக்குத்தான்.”தனித்துவம் தன்னம்பிக்கை
“ஒரு நிமிடம்தான் உள்ளது என்று குறைவாக எண்ணாதே; அறுபது நொடிகள் உள்ளன என்று எண்ணிப் பார். முடியாதது என்று எதுவும் இல்லை.”நேரம் முயற்சி
“உன் விடாமுயற்சியையும் சகிப்புத்தன்மையையும் கண்டு, தோல்விதான் பயப்பட வேண்டுமே தவிர, நீ அல்ல.”சகிப்புத்தன்மை விடாமுயற்சி
“தன்னம்பிக்கையோ, தலைக்கனமோ எதை உன்னுடன் வைத்துக்கொள்கிறாயோ, அதைப் பொறுத்தே உனக்கான பலன் அமையும்.”தலைக்கனம் தன்னம்பிக்கை
“உன் வாழ்க்கையில் துன்பங்களுக்கு மேல் துன்பம் வந்துகொண்டே இருக்கிறது என்றால், இன்பம் உன்னைத் தேடி வரும் காலம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.”இன்பம் துன்பம்
“நாம் செய்வது தவறு என்று பிறர் சுட்டிக்காட்டும் வரை, அது தவறு என்பதை நாம் உணரப் போவதில்லை.”தவறு விழிப்புணர்வு
“உன் கஷ்டத்தில் உன்னைக் ‘கை’விட்டவர்களுக்கு நன்றி சொல்; ஏனெனில், அவர்கள் உன் தன்னம்பிக்‘கை’யை உனக்கு உணர்த்தியவர்கள்.”கஷ்டம் தன்னம்பிக்கை
“உனக்கான ஒன்றை ஒருவன் தட்டிப் பறிப்பதால் அவன் உயரப் போவதுமில்லை; உனக்கான ஒன்றை நீ விட்டுக்கொடுப்பதால் நீ வீழப் போவதுமில்லை.”உரிமை நம்பிக்கை
“தோல்வி என்பது இருள் வெற்றி என்பது வெளிச்சம் தோல்வியின் இருளிலிருந்து வெற்றி எனும் வெளிச்சத்திற்கு நீ வரும்வரை போராடு.”தோல்வி வெற்றி
“தோல்வியை நினைத்து எனக்கு கவலை இல்லை; வெற்றி தராத ஒன்றை தோல்வி எனக்குத் தந்துள்ளது. அதுவே அனுபவம்.”அனுபவம் தோல்வி
“வெற்றியும் நிரந்தரமல்ல; தோல்வியும் நிரந்தரமல்ல. ஆனால், முயற்சி உன்னிடம் இருந்தால் வெற்றி மீண்டும் மீண்டும் உன்னைத் தேடி வரும்.”முயற்சி வெற்றி
“ஒருமுறை வெற்றி பெற்றவர்களைவிட, ஆயிரம் முறை தோல்வியைச் சந்தித்தவர்களே இறுதியில் சாதனையாளர்களாக உருவாகின்றனர்”சாதனை தோல்வி
“இவ்வுலகத்தை மாற்ற வேண்டும் என்று நீ விரும்பினால், அந்த மாற்றத்தை உன்னிடமிருந்தே தொடங்கு.”மாற்றம் முன்னேற்றம்
“வீழ்வது ஒன்றும் வீழ்ச்சி அல்ல; விழுந்து கிடப்பதே உண்மையான வீழ்ச்சி. இதை உணர்ந்தவன் வாழ்க்கையில் ஒருபோதும் தோற்பதில்லை.”எழுச்சி வீழ்ச்சி
“‘நான் பல முறை தோற்றவன்; தோல்வியைக் கண்டு எனக்குப் பயமில்லை’ என்று நினைப்பவனுக்கே வெற்றி நிச்சயம்.”துணிவு தோல்வி
“மண்ணில் உன்னைத் தூக்கி எறிவது புதைப்பதற்காக அல்ல; விதைப்பதற்காக. நீ முளைத்தால் மரம், புதைந்தால் உரம்.”வளர்ச்சி விதை
“உன் வலியும் வேதனையும் உன்னைச் செதுக்கும் உளி. உளியின் வலியைத் தாங்காத கற்கள் என்றும் சிலைகளாவதில்லை.”சிலை வலி
“உனக்குச் சிறகே இல்லையென்றாலும் நீ பறக்கலாம்; தன்னம்பிக்கை என்னும் சிறகு உன்னிடம் இருந்தால்.”சிறகு தன்னம்பிக்கை
“உன்னைக் கீழே தள்ளிப் புதைத்தவர்களுக்கு தெரியாது; நீ யாரென்று. ஒரு நாள் மண்ணைப் பிளந்து வெளியே வரும்போதுதான் தெரியும், நீ விதை என்று.”எழுச்சி விதை
“சில தோல்விகளும் நல்லதுதான்; அந்தத் தோல்விகளை எதிர்கொள்ளும் போதுதான் உன் திறமை வெளிப்படுகிறது.”திறமை தோல்வி
“உன்னைத் தனித்து விடுவது, நீ சிறகை விரிப்பதற்காகத்தானே தவிர, உன் சிறகை உடைப்பதற்காக அல்ல.”சிறகு தனிமை
“நம் வாழ்க்கையில் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாதவர்கள், அன்பைத் தந்தவர்களைவிட, அவமானத்தைத் தந்தவர்களே.”அவமானம் பாடம்